செய்திகள்
பாதுகாப்பு அமைச்சசு பொது தினத்தில் போர் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் ஜனவரி 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தின் போது பாதுகாப்பு அமைச்சு போர் வீரர்கள் மற்றும் உயிநீத்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவும், ஓய்வு பெற்ற, ஊனமுற்ற வீரர்கள் மற்றும் உயிர் நீத்த போர்வீர்ர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்தது.
இலங்கை மற்றும் மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் எண்ணெய் கசிவு மீட்பு பயிட்சியை நிறைவு செய்தனர்
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (SLCG) ஒன்பது (09) உட்பட பத்து (10) இலங்கை அதிகாரிகள், மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை மற்றும் மாலத்தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கேற்பாளர்களுடன் IMO நிலை 1 மற்றும் நிலை 2 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். கூட்டு இயற்கை பாதுகாப்பு குழு (JNCC) வுடன் இணைந்து அம்பிபார் (Ambipar) ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு சமுத்திர நாட்டு கூட்டாண்மை திட்டம் (OCPP) நிதியுதவி அளித்ததாக SLCG ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழையுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் - வானிலை ஆராய்ச்சி நிலையம்
வானிலை ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று (ஜனவரி 20) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைக்கமைய தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்.
Tamil
Tamil
Tamil
Tamil
பதில் பாதுகாப்பு அமைச்சர் உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஊனமுற்ற வீரர்களின் நலன்புரி பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை
பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (ஜனவரி 17) உயிர்நீத்த போர் வீரர்கள் குடும்பங்களின் மற்றும் ஊனமுற்ற வீரர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக கூட்டம் ஒன்று நடைபெற்றது.
விமானப்படை கெடெட் அதிகாரிகளின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விழாவில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்
திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாசாலையில் நேற்று மாலை (ஜனவரி 16) நடைபெற்ற விமானப்படை கெடெட் அதிகாரிகளின் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விழால் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விழாவிற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரவேற்றார்.
Tamil
பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு முப்படைகளின் உதவி
எதிர்வரும் பெரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கலஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழிலாளர் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கை உயர்மட்ட பாதுகாப்பு தலைமைகளை சந்தித்தனர்
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) உயர்மட்டக் தூத்துக்குழு, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது. இச்சந்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.
மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு
நாட்டில் நிலவும் மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) பாதுகாப்பு அமைச்சில் சிரேஷ்ட சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.
இலங்கைக்கான ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்
பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சேயை சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
Tamil
பதில் பாதுகாப்பு அமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று மாலை (ஜனவரி 13) சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
Tamil
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு
பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.
தேசிய அபிவிருத்திக்கு ஒழுக்கமுடன் கூடிய அணுமுறையின்
அவசியம் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 09) ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு (KDU) விஜயம் செய்தார். பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை, KDU துணைவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அன்புடன் வரவேற்றார்.
புதிய இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (ஜன 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி
அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன 06) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சு ‘Clean Sri Lanka' திட்டத்திற்கு பங்களிக்க
ஆயத்த நடவடிக்கைகளில் மும்முரம்
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) தலைமையின் கீழ் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்ககளின் பங்குபற்றலுடன் ‘Clean Sri Lanka’ முன்னெடுப்பு தொடர்பான கூட்டமொன்று நேற்று மாலை (ஜன. 07) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Tamil
ஊர்காவற்துறையில் காலம்சென்ற முன்னாள் Royal Ceylon Navy
வீரருக்கு இலங்கை கடற்படையிர் இறுதி அஞ்சலி செலுத்தினர்
இலங்கை கடற்படை (SLN) வியாழக்கிழமை (ஜனவரி 2) ஊர்காவற்துறையில் காலம்சென்ற முன்னாள் Royal Ceylon Navy இடைநிலை அதிகாரி அருளானந்தம் மரியம்பிள்ளையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். டிசம்பர் 31 ஆம் திகதி (2024) காலம் சென்ற அன்னாரின் இறுதிக்கு கிரிகைகள் கடந்த வியாழக்கிழமை (ஜன 02) ஊர்காவற்துறையில் நடைபெற்ற போதே கடற்படையினர் கடற்படை மரபுக்களுக்கமைய இறுதி அஞ்சலி செலுத்தினர் என கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.