செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

46 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை கப்பல் கொழும்பு வந்தடைந்தது

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று (ஆகஸ்ட் 05) முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) கப்பலில் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவுசெய்து இலங்கை இராணுவத்தின் தேசிய காவல்படையின் (SLNG) பாரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) விசேட செய்தியாளர் சந்திப்பு:

வருகை விசாக்களுடன் வந்து அவற்றை பின்னர் வேலை விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்  மலேசியாவிற்கு வருகைதரும் இலங்கையாக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின்  (NAHTTF) கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி உறுப்பினர்கள் அதன் முன்னோக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) கூட்டம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 03) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் நியமனம்

திருமதி இந்திகா விஜேகுணவர்தன இன்று (ஆகஸ்ட் 03) முதல் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆராய்ச்சி கருத்தரங்கு - 2022

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 'ஆய்வுக் கருத்தரங்கம் - 2022' “மல்டிநோடல் செக்யூரிட்டி டைனமிக்ஸ்” எனும் தொனிப்பொருளின் கீழ் 2022 ஆகஸ்ட் 17 அன்று ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான ஆராய்ச்சி கருத்துக்களை ஆராய்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

“பொதுநலவாய விளையாட்டுகள் 2022” போட்டிகளில் இலங்கை பாதுக்காப்பு படை விளையாட்டு வீரர்கள் திறமை

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாதுகாப்பு நியமனம்

திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு  நியமிக்கப்பட்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக 48 வெள்ள நிவாரணக் குழுக்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினால் சட்டவிரோத குடியகல்வு முயட்சி முறியடிப்பு

இலங்கை கடற்படை மற்றும் வென்னப்புவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வென்னப்புவையிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு சட்டவிரோத குடியகல்வு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் அண்மையில் (31) கைது செய்யப்பட்டனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தவளம்தென்னயில் நிலச்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து இராணுவத்தின் முயற்சியால் வழமைக்கு

58 படைப்பிரிவின் கீழுள்ள 581 பிரிவின் 1 வது படைப்பிரிவின் 5 ஆவது விஜயபாகு காலாட்படை படையினர் நேற்று (1) மாலை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நிலச்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (ஆகஸ்ட் 01) மாத்தறை, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இராணுவ கடற்படை உதவி

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை அவற்றின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்

தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹொலே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 29). இந்த சந்திப்பு இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இராணுவத்தினரின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தேவையுடையோருக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்தை, சிங்ஹபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்விளை ஆகிய பகுதிகளில் வதியும் 200 தேவையுடைய குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் ரூபா 5000/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இலங்கை இராணுவத்தினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடத்தி வரப்பட்ட ரூபா. 9 மில்லியன் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் இரத்த தானம்

கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, கிளிநொச்சி பிரதேச நோயாளர்களின் அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் இரத்த தானம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தினால் புதிய வீடு அன்பளிப்பு

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சந்திரபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பமொன்றிற்கு அண்மையில் புதிய வீடொன்றை நிர்மாணித்து கையளித்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொழும்பு காக்கைதீவு கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது

இலங்கை கடற்படையினர் அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள காக்கைதீவு கடற்கரையை சுத்தம் செய்தனர்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அனுராதபுரத்தில் விமானப்படை யினரால் இரத்த தானம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை விமானப்படையின் அனுராதபுரம் தளத்தினால் அண்மையில் இரத்ததான  முகாம் ஒன்று நடத்தப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடற்படையினால் அனுராதபுரத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

இலங்கை கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் அனுராதபுரம் பலுகஸ்வெவ மைத்திரிகமவில் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil