செய்திகள்
கடலோர பாதுகாப்பு படை கப்பல் அதிகாரமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர்
இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான 'ஜயசாகர' விற்கு ஆணை அதிகாரம் அளிக்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக நகரில் இன்று (ஜூலை, 23) இடம் பெற்றது.
பொதுப் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படும் வளங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் - பாதுகாப்புச் செயலாளர்
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் தனது வருவாயில் கணிசமான பகுதியை நாட்டின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து ஒதுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்த போதிலும், பொதுப் பணத்தில் இருந்து பராமரிக்கப்படும் இச்சொத்துக்களுக்கு பொறுப்புக் கூறுவது உங்கள் கடமை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று மாலை (ஜூலை 22) நடந்த கடற்படையின் வெளியேறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
கிழக்கில் இயற்கை விவசாய நெற்செய்கை அறுவடை
Tamil
Tamil
Tamil
கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்பு
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (ஜூலை 21, 2022) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மற்றொரு கஞ்சா கடத்தல் முயற்சி இலங்கை கடற்படையினால் முறியடிப்பு
யாழ்ப்பாணம், காரைநகர் பழைய கசுரினா கடற்கரைக்கு அப்பால் கடற்பகுதியில் நேற்று (ஜூலை 19) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 172 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
வெள்ளவாய பிரதேசத்தில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவம் உதவி
அண்மையில் வெல்லவாய, மஹகொட யாய தேவகிரி மலைத்தொடரில் ஏட்பட்ட காட்டுத்தீயை அணைக்க அங்குள்ள இராணுவத்தினர் உதவினர்.
வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கஞ்சா மீட்பு
கச்சத்தீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை 18) விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றினர்.
வத்தலையில் ஏட்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவி
வத்தளை, ஹுனுப்பிட்டியில் பழைய உலோகங்கள் சேகரிக்கும் களஞ்சியமொன்றில் நேற்று மாலை (ஜூலை 16) ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படை தீயணைப்பு குழுவினர் அணைத்துள்ளனர்.
காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம்
கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஜூலை, 15) விஜயம் செய்தார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் காயமடைந்த இராணுவ வீரர்களை
பாதுகாப்பு செயலாளர் நேரில் சென்று நலம் விசாரிப்பு
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜூலை 15) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் புதன்கிழமையன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் கடமையாற்றும் போது ஆர்ப்பாட்டக்காரர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான படை வீரர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.
போதைப்பொருளுடன் ஒருவரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது
பேருவளை கரையோர பாதுகாப்பு நிலையத்தின் படையினரும் மற்றும் பொலிசாரும் இணைந்து கடந்த 12 ஆம் திகதி (ஜூலை) பேருவளை மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
வடினாகலை பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தினர் உதவி
அண்மையில் வடினாகலை மலைத் தொடரின் ஒரு பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அங்கு விரைந்த இராணுவ படையினர் உடனடி நடவடிக்கை எடுத்ததாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
தியத்தலாவை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படை பயிலுனர்கள்
தியத்தலாவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு அண்மையில் விமானப்படை பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம்டி ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Tamil
ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்
இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ககு ஃபுகௌரா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (ஜூலை 07) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமிர்த்தம் சந்தித்தார்.
இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர்
மத்திய இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை இராணுவ (SLA) துருப்புகள் அண்மையில் கொழும்பு விசாக்கா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இரத்த தானம் செய்தனர்.
கஞ்சா போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர் இன்று (ஜூலை 6) நுரைச்சோலை ல் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் வடக்கு மாகாணத்தில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பு
இலங்கை கடற்படை (SLN) அண்மையில் (ஜூலை 04) காரைநகர் கால்வாயில் ‘டிராகன் படகு சம்பியன்ஷிப்’போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவி
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு வகையான வாழை, மரக்கறி மற்றும் நெற் பயிர்ச் செய்கை செய்வதன் மூலம் இலங்கை இராணுவத்தின் (SLA) வடக்கைத் தளமாகக் கொண்ட துருப்புக்கள் உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமது பங்களிப்பை செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்களுக்கு இலங்கை கடற்படை உதவி
திருகோணமலை பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக திட்டமிடப்பட்ட இரண்டு நாள் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு இலங்கை கடற்படை உதவியளித்தது.