செய்திகள்
நான்காவது கொழும்பு கடற்படைப் பயிற்சி நிறைவு
இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட நான்காவது கொழும்பு கடற்படை பயிற்சி – 2022 திங்கட்கிழமை (பெப்ரவரி, 14) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த கடற்படை பயிற்சி இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானது.
குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு விமானப்படையினரால் குறைந்த செலவில் நெல் அறுவடைத் திட்டம்
இலங்கை விமானப்படை, குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் அறுவடைச் செலவைக் குறைக்கும் நெல் அறுவடைத் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் துருக்கி எயார்கிராஃப்ட் நிறுவனத்துடன் ஒன்றினைவு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், துருக்கிய எயார்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் காேர்ப்பரேஷனுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஜப்பானிய கடலோர பாதுகாப்புபடை மற்றும் ஜெய்கா நிறுவனத்தினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுப்பு திறன்கள் மதிப்பீடு
ஜப்பானிய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜெய்கா) குழுவொன்று நேற்று (பெப்ரவரி, 13) வெள்ளவத்தையில் உள்ள இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் தலைமையகத்திற்கு வருகை தந்தது.
பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்க்கி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 11) சந்தித்தார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெளிவிவகார அமைச்சரினால் விரிவுரை
வெளிவிவகார அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விரிவுரை நேற்று (பெப்ரவரி, 10) நிகழ்த்தப்பட்டது. ‘ஆயுதப்படைகள், மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனீவா செயல்முறை’ எனும் தலைப்பில் இந்த விரிவுரை இடம் பெற்றது.
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின்
ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வு
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஐந்தாவது வருடாந்த கல்வி அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 10) அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
Tamil
ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மேட்டேரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 09) சந்தித்தார்.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
‘சவால்களை வெற்றி கொண்ட வளமான நாளையும் சுபீட்சமான தாய்நாடும்” என்ற தொனிப் பொருளில் 74 ஆவது சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி, 04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சார மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரைச் சேர்ந்த அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு 50 மின்சார மோட்டார் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
Tamil
நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நைஜீரிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோணி விக்டர் குஜோ,பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, o2) சந்தித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை பாதுகாப்பு செயலாளர் மேற்பார்வை
கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 4ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி, 02) மேற்பார்வை செய்தார்.
துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கேன் கோக்சென் கொக்காயா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, 02) சந்தித்தார்.
இராணுவத்தினரால் அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனம் தயாரிப்பு
இலங்கை இராணுவம், டீசல் எரிபொருளில் இயங்கக்கூடிய ஆறு சிலிண்டர் எஞ்சின்கள் கொண்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனத்தை யாரித்துள்ளது.
Tamil
Tamil
Tamil
அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் ‘ஜெய பிரித்’ பாராயண நிகழ்வு நிறைவு
நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும், தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரனால் ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (26) மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் இன்று (27) காலை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.
சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்
சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும்,
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்களை விரைவாக அழிக்க திட்டம் - பாதுகாப்பு செயலாளர்
கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி,25) தெரிவித்தார்.
Tamil
வண. கொலமுன்னே சுமனவன்ச தேரர் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
பிலியந்தலை, கொலமுன்னே ஸ்ரீ பிம்பராம விஹாரையில் இன்று (ஜனவரி 23)இடம் பெற்ற சமய வைபவத்தின் போது வண. கொலமுன்னே சுமணவன்ச தேரருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விஜினிபாதத்தை (பாரம்பரிய விசிறி ) வழங்கினார்.
மிஹிந்தலை அனுலாதேவி சைத்தியவிற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
வழிபாட்டுத் தலங்களை தரிசிக்கும் நோக்கில் அனுராதபுரத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி 23) மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவிற்கு விஜயம் செய்தார்.