செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பங்களாதேஷ் கடற்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று   சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ  ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள  பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குற்றவியல் நீதி பீடத்தை நிறுவுகிறது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட குற்றவியல் நீதி பீடத்தை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜனவரி 19) வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வழங்கும் 'ஜய பிரித்' நிகழ்வு ஜனவரி 26ம் திகதி நடைபெறும்

பாதுகாப்பு அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'ஜய பிரித்' பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இம்முறை ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழ் வெளியிடப்பட்டது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கணினி பீடத்தால் வெளியிடப்பட்ட சர்வதேச கணிப்பொறி ஆய்வு இதழின் தொகுதி 01இன் வெளியீடு 01 அண்மையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட தீகவாப்பி தூபியின் புனித சின்னங்கள் மீண்டும் தூபியின் உள்ளக அறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது

தீகவாப்பி தூபி தளத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட புனித சின்னங்களை மீண்டும் தூபியின் உள்ளக அறையில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு, வணக்கத்துக்குறிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இன்று (ஜனவரி. 17) இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதுப்பொலிவுடன்மீண்டும் காட்சியளிக்கவுள்ள லாஹுகல ‘நீலகிரி தூபி’

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நீலகிரி மகா தூபி’யின் புனரமைப்புப் பணிகளை இன்று (ஜனவரி, 16) பாதுகாப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணி’யின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

எகிப்தின் புதிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவர் அதிமேதகு மஜித் மொஸ்லே இன்று (ஜனவரி, 12) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பிரதமரினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிய பீடமும் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட பிரதான நுழைவாயிலும் திறந்துவைப்பு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தனது 10வது பீடமான தொழில்நுட்ப பீடத்தை இன்று (ஜனவரி, 10) இரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது ஆரம்பித்து வைத்தது. இந்த நிகழ்வு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட பிரதான நுழைவாயிலை திறந்து வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பானது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

18 மணிநேரம் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் மீட்பு

பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி, 09) மீட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கைப்பற்றப்பட்ட 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை
ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்றிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு விமானப்படை ஊடாக
விமான நிலையத்தில் தடுப்பூசி

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் நிறுவனங்களின் முதல் வேலை நாள் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன, மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் முதலாவது வேலை நாளன்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் முக்கிய நிறுவனங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இந்த ஆண்டை மேலும் பலனளிக்கும் வகையில் புதிய நம்பிக்கையுடன் தொடங்குவோம் - பாதுகாப்பு செயலாளர்

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ச்சியான சேவையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சு வெற்றியடைந்துள்ளதுடன், இந்த சவாலான சூழ்நிலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்காக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இணைய நூலக வசதி அறிமுகம்

பாதுகாப்பு அமைச்சு அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் இணைய நூலக வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளதை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப்படைக்கு அரச துறையின் சிறந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெள்ளி விருது

அரச துறைகளில் 2019 ஆம் ஆண்டின் நிதியாண்டிற்கான ‘ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான’ வெள்ளி விருது விமானப்படைக்கு வழங்கப்பட்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு விமானப்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 10வது தடவையாக இடம்பெறுகின்றது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்காக விமானப்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மையமாகக் கொண்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.