செய்திகள்
கிழக்கில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நியமனம்
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று புதிய உறுப்பினர்கள் நேற்று (நவம்பர் 29, 2021) வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tamil
கொழும்பு மாநாடு 2021: தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்
பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முதன்மையான சிந்தனைக் குழுவான தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் , அதன் இரண்டாவது தேசிய மாநாடான “கொழும்பு மாநாடு -2021” இம்மாதம் 24ம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பத்தரமுல்ல வாட்டர்ஸ் எட்ஜில் நடாத்தியது. இந்த மாநாடு “தேசிய பாதுகாப்பு மீதான சர்வதேச பரிமாணங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
‘ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது…
ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் கலீட் கியாரி (Khaled Khiari) தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு
பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டது.
விமானப்படையின் விதை தூவலின் ஆறாவது அலை ஆரம்பம்
சியாம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கெபிலித்த அரச வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர், 23) சுமார் 65,000 விதைகளை தூவுவதற்கு இலங்கை விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளருக்கு பாதுகாப்பு செயலாளர் பிரியாவிடையளிப்பு
ங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் இன்று (நவம்பர், 24) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
கிண்ணியாவில் படகுப்பாதை விபத்து- மீட்பு பணியில் கடற்படையினர்
கிண்ணியாவில் இன்று காலை (நவம்பர், 23) இடம்பெற்ற சோகமான படகு விபத்தினை தொடர்ந்து, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் கடற்படை இறங்கியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் (Nikolai Patrushev) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் சந்தித்தார்
சோவியத் சோசலிச குடியரசின் அரச புலனாய்வுச் சேவை (KGB) மற்றும் ரஷ்ய ஃபெடரல் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள நிக்கொலாய் பட்ருஷெவ் அவர்கள், 2008ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளராகப் பணியாற்றி வருகின்றார், இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022 பெப்ரவரி 19அம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியை அடைகின்றன நிக்கொலாய் அவர்களின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு சபை செயலாளர் இலங்கைக்கு வருகை
ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிக்கோலாய் பட்ருஷேவ் நேற்றைய தினம் (நவம்பர், 22) இலங்கைக்கு வருகை தந்தார்.
50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு) விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
Tamil
Tamil
Tamil
போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( நவம்பர்,14) நடைபெற்ற போர்வீரர்கள் ஞாபகார்த்த தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Tamil
மஹா ஓயா தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மஹா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர நடவடிக்கைகளின்போது உதவ கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் தயார் நிலையில்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புற்று நோய் சிகிச்சை இயந்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைப்பு
புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி (HIPEC) இயந்திரம் ஒன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் அரச நிறுவனங்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கையளிப்பு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் சில பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களிடம் வைபவ ரீதியாக பாதுகாப்பு செயலாளரும், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) கையளிக்கப்பட்டது.
Tamil
Tamil