செய்திகள்
இந்தியாவிலிருந்து மருத்துவ ஒக்ஸிஜனைக் கொண்டுவர கடற்படைக் கப்பல் ஷக்தி பயணம்
இலங்கைக்கு மருத்துவ தர ஒக்ஸிஜனைக் கொண்டுவர இந்தியாவின் சென்னை துறைமுகத்தை நோக்கி கடற்படைக்கப்பல் ஷக்தி இன்று (ஆகஸ்ட் 17) காலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
Tamil
Tamil
கேரள கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் இன்று காலை (ஆகஸ்ட்,14) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 126 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் இரண்டு கிலோகிராமிற்கு மேற்பட்ட 'ஐஸ்' ரக போதைப்பொருள் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த பொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் வைத்தியசாலைக்கு ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கிவைப்பு
அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால் நேற்று (ஓகஸ்ட்,13) வழங்கிவைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிப்பு
தேசிய தடுப்பூசி ஏற்றல் திட்டத்தின் மேலும் ஒரு படியாக இலங்கை இராணுவத்தினரால் மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி திட்டத்தை இன்று (12) ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இம்மாகாணத்தில் உள்ள முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் பலவீனமான வர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் களனி ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது
களனி ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 12) விஹாரையிலிருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எட்வேர்ட் அப்பள்டொன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) இன்று (ஓகஸ்ட், 11) சந்தித்தார்.
சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் கொரதோட்ட ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது
கொரதோட்ட ரஜ மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 11) விஹாரையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை ஆரம்பம்
நாட்டின் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரத்தின் மூன்றாம் நாள் பவனி ஆரம்பம்
பெல்லன்வில ராஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்தது.
பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் பொதுமக்கள் வழிபாட்டிற்காக
சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 08) மாலை பெல்லன்வில ரஜமஹா விஹாரையை வந்தடைந்தது.
சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம்' என்பன தரிசிப்புக்காக இன்று முதல் கங்காராமவில் காட்சிக்கு
மகா சங்கத்தினரின் மத ஆசிர்வாதங்களுடன் சந்தஹிரு சேய தூபியின் ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பன பொதுமக்கள் வழிபாட்டிற்காக கொழும்பு, கங்காராம விஹாரையில் இன்று (ஆகஸ்ட், 05) வைக்கப்பட்டது.
விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிப்பு
கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கென இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் தெல்தெனிய ஆதார வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலை ஆகியவற்றிற்கு இலங்கை விமானப்படை கையளித்துள்ளது.
முல்லேரியா வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகம் விமானப்படையினரால் நிர்மாணம்
இலங்கை விமானப்படை முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் புதிய வார்டு வளாகத்தின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு சுகாதார அமைச்சர் கெளரவ. பவித்ராதேவி வன்னியாராச்சியிடம் நேற்று (ஆகஸ்ட் 3) கையளிக்கப்பட்டது.
இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி விஜயம்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
Tamil
கடற்படையினரால் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு
மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி அதிகாரிகளிடம் நேற்று (ஆகஸ்ட், 01) கையளிக்கப்பட்டது.
படையினரைதொழில்முயற்சியாளர்களாக மாற்றியமைத்தமைக்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு
படைவீரர் ஒருவர் தனக்கு வழங்கப்படும் எந்தவொரு பணிகளையும் செய்யத் தயார் நிலையில் உள்ளதால் அவர்களால் செய்ய முடியாது என்று ஒன்றுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்தார்.
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக சமூகத்தில் பரப்பப்ட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது - பாதுகாப்பு செயலாளர்
மனித மூலதனம், வளங்கள் மற்றும் அறிவு என்பவற்றின் அதிகபட்ச பயன்பாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் பயன்படுத்தப்படும்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இராணுவப் போர் வீரர்கள்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் - 2021 இல் முதலாம் இலக்க சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் மாற்றுத்திறனாளி வீரர் சார்ஜென்ட் டி.எச்.ஆர் தர்மசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தஹிருசேய தூபியின் ‘சூடாமாணிக்கம்’ பதிப்பு மற்றும் ‘மினாரா' நிர்மான பணிகள் ஆரம்பம்
சந்தஹிருசேய தூபியில் பதிக்கப்படவுள்ள சூடா மாணிக்கம் மற்றும் நிர்மாணிக்கப்படவுள்ள மினாரா கோபுரம் என்பவற்றை பொதுமக்கள் வழிபடும் வகையில் நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
Tamil
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மின்னிதழ் வெளியீடு
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்லொழுக்காற்று கற்கைகளின் மின்இதழ் (Journal of Multi disciplinary Studies ) வெளியீடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸினால் நேற்றைய தினம் (ஜூலை, 28) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.