செய்திகள்
சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு ஒரு தொகுதி அங்கவீனமுற்றோருக்கான உபகரணங்களை வழங்கி வைத்தமைக்காக களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மஹிந்த சரணபாலவுக்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்பு படையினரால் 108 கடல் ஆமைகள் கடலுக்குள் விடுவிக்கப்பட்டன
இலங்கை கடலோர பாதுகாப்பு படை, கடல் ஆமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 108 கடல் ஆமைக் குஞ்சுகளை அண்மையில் கடலுக்குள் விடுவித்தது.
கிளிநொச்சியில் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு
கிளிநொச்சி பிராந்தியத்தில் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, இப்பிராந்திய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களினால் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டன.
Tamil
யாழில் 65 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம், காங்கேசந்துறை கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 216.750 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கடற்படையினரால் கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் பணிகள் தொடர்கிறது
கடல் தாவர சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் கடற்படையினர் கடற்கரையினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுத்தனர். மேலும் கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்கில் தலைமன்னார் மற்றும் நாச்சிக்குடா பகுதிகளிலுள்ள கண்டல் சூழலில் கண்டல் தாவரங்களையும் நடுகை செய்தனர்.
கொரிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு வூன்ஜின் ஜியோங்;, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) காலை (ஜூலை 22) சந்தித்தார்.
சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்
சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு சர்வதேச பயிற்சிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் மற்றும் மிரிஸ்ஸ உயர் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்பு திட்டம் நடத்திய விஜயம் செய்தல், தரித்திருத்தல், தேடல் மற்றும் பறிமுதல் செய்தல் பாடத்திட்டத்தை இலங்கை கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் பதினாறு பேர் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
Tamil
Tamil
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் யாழ் நகரத்தில் இராணுவத்தினரால் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெப்பு
கொவிட்-19 தொற்றுநோய் மேலும் பரவலடைவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினால் யாழ் நகரம் சுத்தம் செய்யும் மற்றும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எப்பவாலாவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் நிறுவப்பட்டது
எப்பவாலாவில் அமைந்துள்ள பண்டைய ஸ்ரீ சம்புத்த வீரசிங்கராமயவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஜூலை 17 அன்று நிறுவப்பட்டது.
காயமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்
பலநாள் மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவர் காயமுற்றதன் காரணமாக கடற்படையினரால் நேற்றையதினம் (ஜூலை, 18) கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற கடற்படை குறிபார்த்து சுடும் வீராங்கனைக்கு தர உயர்வு
டோக்யோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு குறிபார்த்து சுடும் போட்டியில் தகுதிபெற்ற கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால்
பெட்டி ஒப்பிசர் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது
31 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இலங்கையில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைக்கு பாராட்டு
இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் நேற்று (ஜூலை 15) விஹார மஹா தேவி பூங்காவில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் நிலையத்திற்கு வருகை தந்தார்.
தீகவாபி தூபியின் முன்னைய மகிமையை மீண்டும் கொண்டுவரப்படும்
மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இராணுவத்தினரால் கிளிநொச்சியில் மேலும் இரு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள படைவீரர்களினால் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரண்டு தேவையுடைய குடும்பங்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேல் மாகாண ஆசிரியர்களுக்கு இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுப்பு
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேல் மாகாண ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஜூலை, 12) காலை கொழும்பு இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
103 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
யாழ் அனலைதீவு கடற்கரைப் பகுதியில் 344.55 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் இன்று (ஜூலை, 12) கைப்பற்றப்பட்டுள்ளது.
கின் கங்கையில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படையினர்
கின் கங்கை அகலிய மற்றும் தொடங்கொட பாலங்களின் கீழ் நீர் வழிப்பாதையை தடை செய்யும் வகையில் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் கடற்படை வீரர்களினால் அகற்றப்பட்டது.