செய்திகள்
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவர் நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பிரியங்கி அமராபந்து பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரட்னவிடமிருந்து (ஓய்வு) தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10 , 11 ல் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்
சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முப்படையினரால்விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
75மிமீ க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் - வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா வெரெளவத்தையில் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு
கடற்படையினரால் கம்பஹா, வெரெளவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் (ஜூன், 7) திறந்து வைக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் படையினரின் நடவடிக்கைகள்
கடற்படையின் வெள்ள நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசரகால நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கசிவுகள் தொடர்பில் கடற்படையின் சுழியோடிகள் ஆய்வு
தீ அனர்த்தத்திற்கு உள்ளன எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுகின்றனவா என்பன தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் கடற்படையின் அனுபவம் வாய்ந்த சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.
Tamil
Tamil
இலங்கை தொடர்பான தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் இலங்கை கோரிக்கை
காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413 என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
Tamil
Tamil
மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை இராணுவத்தினர் மீட்பு
மாவனெல்லை, தெவனகல பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
களனி கங்கை கரையோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்று வரும் மழைவீழ்ச்சி காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் அடுத்த 6 முதல் 16 மணி நேரத்திற்குள் ஹன்வெல்ல நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 9.0 மீட்டர் வரையும் நகலகம் வீதி தே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 6.60 அடி வரையும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்படை மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையம் சுற்றுச்சூழல் தொடர்பாக ஆராய்வு
இலங்கை கடற்படையின் நீரியல் ஆய்வு சேவையகத்தினால் இயக்கப்பட்ட தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான முகவர் நிலையத்தின் ஆய்வுக் கப்பல் மூலம் அண்மையில் தீ விபத்துக்குள்ளான கப்பலின் கடல் பகுதியில் இருந்து நீர் மற்றும் வண்டல் மாதிரிகளை சேகரித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.