செய்திகள்
பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்புச் செயலாளராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி. ராஸியா பெண்ஸே பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 19) சந்தித்தார்.
நாம் நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் - ஜனாதிபதி
மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் ‘நாட்டை காப்பாற்றுங்கள்’ என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைவருக்கும் ஆசி வேண்டி சுதந்திர சதுக்கத்தில் 21 நாட்கள் பிரித் பாராயணம்
அனைவருக்கும் ஆசி வேண்டி நடத்தப்பட்ட பிரித் பாராயண ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (18) மாலை ஆரம்பமான இந்த பிரித் பாராயணம் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடம்பெறவுள்ளது.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி நாரஹென்பிட்ட அபயராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சமய நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில் இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.
மிரிஸவெட்டிய மகா சேயவில் பெளத்த மத அனுஸ்டானங்கள் முன்னெடுப்பு
அனுராதபுர மிரிஸவெட்டிய மகா சேயவில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட பெளத்த மத அனுஸ்டானங்களில் ஜனாதிபதி கொட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார்.
சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு
அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு ஹாசிம் அஷ்ஜஸாதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ. ஷ்கொடா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.
தீகவாபி தூபியின் மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
தீகவாபி தூபியை மீள் நிர்மாண செய்வதற்கான அடிக்கள் நாட்டும் வைபவம் இன்று இடம் பெற்றது. அம்பாறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ தூபியை மீள் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
பிரியா விடை பெறும் இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து பிரியா விடை பெறும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் ரவி ஷேகர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன இன்று (நவம்பர்,10) சந்தித்தார்.
திரு ரவீநாத ஆரியசின்ஹா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்கா வாஷிங்டன் டீசி நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.
Tamil
புதிய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 04) சந்தித்தார்.
அட்மிரல் பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவை இன்று (நவம்பர், 03) சந்தித்தார்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப்படை தளபதியின் பங்களிப்பு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் மூன்று தசாப்த கால நீண்ட பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை விமானப்படை பல வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸின் பங்களிப்பு அளப்பரியது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
Tamil
மேல் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் பணிபுரிய அரசாங்கம் அனுமதி
விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் தங்களது பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதாக பாதுகாப்பு செயலாளர் உறுதிமொழி
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வகையில் அங்கு பௌத்த மத வழிபாட்டுக்கான புனித தலங்கள் அழிவடைந்து செல்வதை நான் கண்கூடாக கண்டுள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.
விமானப் படைத்தளபதி பாதுகாப்பு செயலருடன் பிரியாவிடை சந்திப்பு
சேவை காலத்தைப் பூர்த்தி செய்து சேவையில் இருந்து வெளியேறிச் செல்ல உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.
இராணுவ தலைமையகத்தில் இராணுவ அணிகலன் விற்பனைக் கூடம் பாதுகாப்புச் செயலாளரினால் திறந்து வைப்பு
பத்தரமுல்லவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இராணுவ அணி கலன்களை விற்பனை செய்யும் விற்பனைக் கூடத்தினை பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ரானி குணரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
Tamil