செய்திகள்
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டுகோள்
இலங்கைக்குள் பிரவேசிக்கும் இராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை சமர்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் தமது நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்னரான 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளையே அவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரிவோர் அனைவரும் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி உறுதியளிப்பு
வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
செயலணிகள் இரண்டின் தலைவராக பாதுகாப்பு செயலாளர்
ஒழுக்க நெறியுள்ள, குணநலன் கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்துடன் கூடிய பாதுகாப்பான தேசமொன்றை கட்டி எழுப்பும் வகையில் 13 அங்கத்தவர்கள்ளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் சிறைச்சாலைகளிலிருந்து வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் போன்ற குற்றங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து வழிநடத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இணையதள தாக்குதல் முயற்சிகளில் தரவு மீறல் எதுவும் ஏற்படவில்லை
இலங்கையில் ஒரு சில அரச இணையத்தளங்கள், செயற்பாட்டாளர்கள் குழுவினால் (activist) சேதப்படுத்தப்பட்டதை (defaced) இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு | ஒருங்கிணைப்பு மையம் (Srilanka
தீவிரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்
தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியதாகும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தன இன்று (மே 27) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கொவிட் -19 கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் இலங்கையை பாராட்டிய இந்தியா
ஜனாதிபதி கோட்டபாய தலைமையின் கீழ் கொவிட் -19 கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க ஜனாதிபதி செயலணி
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸின் பரவல் குறித்த ஊடகங்களின் ஊகங்களை கடற்படை மறுப்பு
வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வெளியிட்டுள்ள சில ஊடகங்களின் அறிக்கைகளை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா முற்றிலும் மறுத்துள்ளார். கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று பரவலடைவதை தடுக்கும் தடுக்கும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தேவையுடைய மக்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கவென வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
படையினருக்கு தொடர்ந்து அகௌரவத்தினை ஏற்படுத்தும் சர்வதேச நிறுவனங்களிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை - ஜனாதிபதி ராஜபக்ஷ
இலங்கையின் பாதுகாப்பு படையினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை அகௌரவப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - பாதுகாப்பு செயலாளர்
தீவிரவாத சக்திகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக சமூக ஊடகங்களில் உலாவ செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகின்றது.
ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி
பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை பதிகிறேன்.
போராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது - பாதுகாப்பு செயலாளர்
எந்தவொரு சக்தியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஅரசு அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒன்று கூடல்களை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுமாறு பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எந்தவொரு ஒன்று கூடல்கள் மற்றும் கூட்டங்கள் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு ஏஐஏ மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நன்கொடை
வரையறுக்கப்பட்ட ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் கேகாலை கிளையினால் ரூ. 500,000 , இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கும் நடவடிக்கை முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு பொருத்தமற்றது
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மற்றும் மதங்களின் தேசிய பாரம்பரிய தளங்கள் பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
தொல்பொருள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் தனிநபர் மற்றும் திட்டமிட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.
கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் 'இட்டுகம’ ஊடக பிரச்சாரம் இன்று ஆரம்பம்
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் அதனோடு இணைந்த சமூக நலத் திட்டம் ஆகியற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதென ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் நிறுவப்பட்ட கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி திரட்டும் முயற்சியான 'இட்டுகம' வுக்கு ஊடக பிரச்சாரத்தனை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (மே, 13) ஆரம்பமானது.
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீதுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கிறது.
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் முனசிங்க நியமனம்
இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கதிரியக்கவியல் நிபுணர் மேஜர் ஜெனரல் (டொக்டர்) சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போரில் அங்கவீனமுற்ற பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினால் மீள பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உடைகள் அன்பளிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு வினியோகிக்கவென போரில்...