செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஒழுக்கமிகுந்த பிரஜைகளை உருவாக்க மாணவ படையணியை பிரபல்யமாக்குவது அவசியமாகும் - பாதுகாப்புச் செயலாளர்

பாடசாலைகளில் மாணவ படையணியை பிரபலபடுத்துவதன் மூலம் ஒழுக்க விழுமியங்களை  பேணி சட்டத்தை மதிக்கும் பிரஜைகளை உருவாக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள்

திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இணைய குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசினால் புதிய சட்ட மூலம்

சமூக ஊடகங்களில் அவதூறான பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதனை தடுப்பதற்கு  புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன்  சமூக ஊடகங்கள் வாயிலாக  வெறுப்புனர்வை பரப்பும் வகையிலான   இன,மத ரீதியாக அமைந்த  பதிவுகளை  உடனடியாக அகற்றும் பொறிமுறையையும் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பொதுமக்கள் மற்றும் பொலிசாரின் பிரச்சினைகளை தீர்க்க ' பொலிஸ் குறை தீர்த்தல் தினம்

பொலிஸார் மீதான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கும், பொலிஸார் மத்தியில் நிலுவையில் உள்ள நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில்  ‘பொலிஸ் குறை தீர்த்தல் தினம்’ ஜனவரி 29ம் திகதி பத்தரமுல்லவில் உள்ள சுஹுரூபாயவில் நடைபெறவுள்ளது.  

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு உபகரண கொள்வனவிற்காக இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

பாதுகாப்பு உபகரணங்களை   கொள்வனவு செவதற்காக  இந்தியாவினால்  இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனுதவி வழங்குவதற்கு   இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஜனவரி,18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சிவிலியன் ட்ரோன் பாவனைக்கான தடை அரசினால் நீக்கம்

கடந்த ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ட்ரோன் பாவனைகளுக்கான புதிய விதிமுறைகளுடன் ட்ரோன் பாவனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நேற்றைய தினம் நீக்கியது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய உப வேந்தராக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கடமைகளை பொறுப்பேற்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் 2020 ஜனவரி 16ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்த ரஷ்யா உறுதி

நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கு, இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை  பாராட்டியுள்ள ரஷ்ய அரசு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும்  உடன்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சந்தஹிரு சேய தூபியின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பணிப்பு

இலங்கையின் நான்காவது உயர்ந்த  தாது கோபுரமான சந்தஹிரு சேய  தூபியின் எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு சமபந்த்தப்பட்ட பாதுகாப்பு படை அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பணித்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய புலனாய்வு புதிய சட்டமூல வரைவிற்கு அரசு அங்கீகாரம்

தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அனைத்து புலனாய்வு சேவைகளுக்கும் வலுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் வரையப்பட்ட புதிய தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை ஜனாதிபதி – பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இன்னைந்து கொள்கிறேன்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக பொது மன்னிப்பு காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலத்தை அரசாங்கம் அறிவிப்பு

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்காக நிவாரண காலத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தவறாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்

உயிர்த்த  ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட மற்றும் தவறாக வழி நடாத்தப்பட்ட  இளைஞர்களை நெறிப்படுத்த முறையான  திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்த்துள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதை வஸ்து பாவனையிலிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – பாதுகாப்பு செயலாளர்

விசேடமாக அமைக்கப்பட்ட சட்ட அமுலாக்கள் பிரிவுகளின் உதவியுடன் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பானது அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாகவே புறக்கணிக்கப்பட்டது – பாதுகாப்பு செயலாளர்

நாட்டின் தேசிய பாதுகாப்பானது கடந்தகாலங்களில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்ததாகவும் மாறாக தற்போதைய அரசாங்கம் பாதுகப்பானாதும் அமைதியானதுமான தேசத்தை உருவாக்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன இன்று (13) தெரிவித்தார்.  


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எஸ் ரி எப்பினால் விஷேட நடவடிக்கை பிரிவு

தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாபை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நாட்டின் துரித அபிவிருத்தியை கருத்திற்கொண்டு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் துரித அபிவிருத்தியை கருத்திற்கொண்டு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.  

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நோர்வே தூதுவர்  ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal ) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 08) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஹெய்லிஸ் குழுமம் சுற்றுச்சூழல் பொலிஸாருக்கு 10,000 கையுறைகளை நன்கொடையாக அளிப்பு

அரசாங்கத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்  எனும்  கருத்துட்டத்திற்கு அமைய ஒரு தொகை இரப்பர் கையுறைகளை ஹெய்லீஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் டிப் தயாரிப்பு நிறுவனம் பொலிஸ்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு  இன்று (ஜனவரி,07)  கையளித்தது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளையின் பணிகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மீளாய்வு

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, இன்று (ஜனவரி,07) கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கிளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

விமானப் படை விமான விபத்து : அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஹப்புத்தலையில் இடம்பெற்ற விமானப் படை விமான விபத்து சம்பவத்திற்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு  அரச பகுப்பாய்வாளர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு  பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை விமானப் படை விமானம் ஹப்புத்தளையில் விபத்து

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானம் இன்று (ஜனவரி-03) காலை ஹப்புத்தளை பிரதேசத்தில விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளராக நியமனம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஓய்வு சுதந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

சட்டவிரோத குடியேற்றகாரர்கள் 175க்கும் மேற்பட்டோர் கடற்படையினரால் கைது

2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்திற்கு நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்றகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.