செய்திகள்
இமதுவயில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்துக்கு
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் விஜயம்
இமதுவை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட இடத்தின் நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஒக்டோபர் 12) அப்பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஒக்.12) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அமெரிக்க கடற்படை கப்பல் ‘USNS Brunswick’ கொழும்பு வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'யுஎஸ்என்எஸ் பிரன்ஸ்விக்' (USNS Brunswick) என்ற கப்பல் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று (ஒக்.11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் கலந்துரையாடல்
புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (அக். 11) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
11வது ‘காலி உரையாடல் 2023’ சர்வதேச கடல்சார் மாநாடு நாளை ஆரம்பம்
பாதுகாப்பு அமைச்சு மற்றும் Geopolitical Cartographer (GC) நிருவனம் இணைந்து இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள 11வது ‘காலி உரையாடல் 2023’ சர்வதேச கடல்சார் மாநாடு நாளை (அக். 12) காலியில் உள்ள ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குடிநீர் விநியோகம்
அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு பதினைந்தாயிரம் (15,000) குடிநீர் போத்தல்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
Tamil
இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்
இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் கௌரவ ஆன்-மேரி ட்ரெவல்யன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (அக். 10) இலங்கையை வந்தடைந்தார்.
Tamil
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் விஜயம்
மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று (ஒக்டோபர் 8) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
கொள்ளுப்பிட்டி பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் உடனடி விஜயம்
கொழும்பிலிருந்து தெனியாயவிற்கு சென்றுக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து ஒரு பாரிய மரம் விழுந்து விபத்துக்குள்ளானது.
Tamil
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப்
பணிப்பாளர் நாயகமாக கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் புதிய மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகமாக தற்போது அதன் பதில் பணிப்பாளரான (ஆராய்ச்சி) கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tamil
தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறுவதா? என்பதை அறிவார்ந்த மனித வளம் தீர்மானிக்க வேண்டும்
நாட்டை, பொருளாதார சவால்களிலிருந்து மீட்டெடுத்து போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதற்காக மனித வளத்தை ஒன்றுதிரட்ட வேண்டுமெனவும், சவால்களுக்கு மத்தியில் நாட்டை விட்டுச் செல்வதா? இல்லையா? என்பதை அறிவார்ந்த சமூகம் சிந்திக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.