செய்திகள்
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும், உலக வாழ் முஸ்லிம் மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் ஓரளவுக்கு அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள்
கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளனர். குறித்த தூய்மைப்படுத்தும் பணியானது, ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு அமைப்பின் (HACGAM) கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்திற்கு இணையாக அதன் பிராந்திய பணியகங்களினால் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு 'பொப்பி மலர்’ அணிவித்தனர்.
சேவைக் காலம் முடிந்து செல்லும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே நோக்கமாகும்
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.
வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் 500 முகக் கவசங்கள் நன்கொடையாக அன்பளிப்பு
வரையறுக்கப்பட்ட ஸ்லிம் (SLIM) மருந்துகள் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் மூடுபனி எதிர்ப்பு முகக் கவசங்கள் அடங்கிய பொதி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மேலும் மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செப். 20) எதிர்வுகூறியுள்ளது.
பாதுகாப்பு செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேராவினால் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு இன்று (செப். 19) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
Tamil
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பதில் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்
பங்குதாரர் இரவு - 2023 நிகழ்வில் பங்கேற்பு
பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (14) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்குதாரர் இரவு – 2023 நிகழ்வில் கலந்து கொண்டார்.
காத்தான்குடியில் இராணுவத்தினரால் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் மற்றும் அதன் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு காத்தான்குடியில் இடம்பெற்றது.
சீரற்ற காலநிலை மேலும் தொடரலாம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Tamil
இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு
நிறைவைக் கொண்டாடுகிறது
சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு நிறைவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியான்வில தலைமையில் அதன் தலைமையக வளாகத்தில் செப்டம்பர் 13ஆம் திகதி கொண்டாடியது.
Tamil
பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.