பாதுகாப்பு செய்திகள்
“யாஸ்” சூறாவளி தொடர்பான அறிவுறுத்தல்
கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது “யாஸ்” (“YAAS”) என்ற ஒருசூறாவளியாக வலுவடைந்து இன்று,மே 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வட அகலாங்கு 16.3N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களை தடுக்கும் பணிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க, மாவட்ட மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பிரதேசங்களில் வசிக்கும் நபர்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல வெள்ள நீர் கசிவை தடுக்கும் பணிகளில் இராணுவத்தினர்
பொல்வத்தை, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய வீதிகள் களனி கங்கையின் நீர் மட்டும் அதிகரித்ததன் காரணமாக நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில் இராணுவத்தினர் களனி கங்கையின் இருமருங்கிலும் மணல் மூட்டைகளை வைத்தனர்.
கடற்படையினரால் ரூ. 39 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது
யாழ் தொண்டமானாறு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 39 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகின்றது
கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவிற்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவில் திறந்து வைப்பு
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட விஷேட அவசர சிகிச்சை பிரிவு முல்லேரியாவாவில் உள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் நேற்று (மே 21) திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார தேவைகளுக்காக விமானப்படையினர் இரத்த தானம்
நாட்டில் வைரஸ்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை விமானப்படை, மஹரகம ‘அபேக்ஷா’ வைத்தியசாலையுடன் இணைந்து கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் நேற்று (மே 21) இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஒரு தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மன்னார் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1.45கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
'டக்டே' சூறாவளி தொடர்பில் அவதானமாக செயற்படவும்
தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவாகியுள்ள தாழமுக்கம் ‘டக்டே’ எனும் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.