பாதுகாப்பு செய்திகள்
பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டினை நினைவுகூறும் அதேசமயம், 2021 ஏப்ரல் 4ம் திகதி இடம்பெறவுள்ள உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுதப்பட்டுள்ளது.
வெடி பொருட்களை கண்டறியும் மோப்ப நாய்களுக்கான மிருக வைத்தியசாலை திறப்பு
வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை கள பொறியியல் படையணி பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவினால் திறந்துவைக்கப்பட்டது.
2021 ஆண்டுக்கான முதுமாணி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான முதுமாணி கற்கைகள் மார்ச் 30ம் திகதி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இராணுவத்தினரால் ரூ. 13.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது
மன்னார், பேசலை கடற்கரைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 கிலோகிராம் கேரள கஞ்சா இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.
யாழ் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்
காங்கேசந்துறை, திஸ்ஸ ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின்போது, யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது
கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விமானப்படையினரால் தியுல்வெவ மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள்
இலங்கை விமானப்படை அதன் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் தியுல்வெவ பிரதேச மக்களுக்கான ஒரு குடிநீர் திட்டத்தை வைபவரீதியாக அண்மையில் கையளித்தது.
திக்கோவிட்ட துறைமுகத்தில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (29) பல நாள் மீன்பிடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகு ஒன்றில் ஏற்பட்ட தீயினை கடற்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஓமந்தை மரையிலுப்பைக்குளத்தில் ஏற்பட்ட உடைப்பு இராணுவத்தினரால் சீரமைப்பு
ஓமந்தை, இலைமறந்தான் குளம் பிரதேசத்தில் உள்ள மரையிலுப்பைக் குளத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினை தடுத்து நிறுத்த இராணுவத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். நீர்கசிவு காரணமாக குளக்கட்டு உடைப்பெடுப்பதை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினரால் மக்கள் நலன் கருதி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தினத்தில் இலங்கை இராணுவ பரசூட் வீரர்கள் சாகசம்
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தின விழாவில், இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி பரசூட் வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினருடன் இணைந்து பரசூட் சாகசங்களை வெளிப்படுத்தினர்.
பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் மன்னந்தல் தமிழ் ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி கற்கும் முல்லைத்தீவை சேர்ந்த 50 மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
கடற்படை சேவா வனிதா பிரிவினால் மரம் நடுகை திட்டம்
சர்வதேச வன தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் நாடு முழுவதும் மரம் நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
71 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் பறிமுதல்
யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியில் நேற்றையதினம் (மார்ச் 22) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை டிப்பர் லொரி மூலம் கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமனம்
இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகுரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
அகுரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் பொருட்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (மார்ச் 21) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
உயிர் காக்கும் மனிதாபிமான திட்டத்திற்கமைய இராணுவம் இரத்ததானம்
கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலன்கருதி கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையில் இலங்கை இராணுவத்தினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்பு
மாலியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ. நா. பலபரிமாண ஒருங்கிணைந்த பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் இலங்கை படைக்குழுவினர் மார்ச் 15ம் திகதி வரை மேற்கொண்டுள்ள 21 பிரமுகர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் 15 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட் சாதனங்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.