பாதுகாப்பு செய்திகள்
பொலிஸார் சுமார் 200 மில்லியன் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்
அம்பலாங்கொடையின் படபாபண்டிமுள்ள பகுதியல் சுமார் 200 மில்லியன் பெறுமதியான 12 கிலோ மெத்திலினெடோக்ஸிமெதாம்பேட்டமைன் (எம் டி எம் ஏ ) ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்ஹேலர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் மோசடி - பொலிஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை
அண்மையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் (இன்ஹேலர்களைப்) உட்சுவாசக்கருவிகளை பயன்படுத்தி போதைப்பொருள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (16) தெரிவித்தார்.
துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை
துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,658 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து மேலும் 12 பேர் வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 14) 2,658 ஆக அதிகரித்துள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வலசமுள்ள மடகன்கொட பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறுந்தூர துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப்பேர் வைத்திய சாலைகளில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியதை தொடர்ந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு
கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் 6,381 கிலோ மஞ்சளினை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த 13 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
பருத்தித்துறையில் 275கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
பருத்தித்துறை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 275 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.
தொல்பொருட்களை திருட மேற்கொண்ட முயற்சி பொலிசாரினால் முறியடிப்பு
ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் தொல் பொருட்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மெளஸாகல மண்சரிவினால் ஏற்பட்ட போக்குவத்து தடைகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர்
நுவரெலிய,மெளஸாகல, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட போக்குவரத்து தடைகளை அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் 19 வது தேசிய பாதுகாப்பு படைப் பிரிவு வீரர்கள் ஈடுபட்டனர்.
பேஸ்புக் விருந்துபசாரம்: 20 இளைஞர்கள் கைது
பேஸ்புக் நண்பர்களின் விருந்துபசார நிகழ்வு ஒன்றில் போதைப்பொருள் பாவித்ததன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 20 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 579 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக பனாம பிரதேசத்தில் உள்ள புராண போதிருக்காராம விஹாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
வெலிகடை சிறைச்சாலையில் விரைவில் 15 அடி உயரமுள்ள புதிய வேலி
வெலிகடை சிறைச்சாலையில் 15 அடி உயரமுள்ள புதிய பாதுகாப்பு வேலி அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மிதக்கும் சேதக்கட்டுப்பாட்டு மாதிரி அமைப்பு கடற்படையினரால் அறிமுகம்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அதிவேக தாக்குதல் படகிற்கான சேதங்களை பழுது பார்க்கும் புதிய வடிவிலான சேதகட்டுப்பாட்டு தளம் ஒன்றினை இலங்கை கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பத்து இலங்கையர்களுக்கு காயம்
பெய்ரூட் வெடிப்பு சம்பவம் காரணமாக காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் பதிவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 2,839 ஆக பதிவாகியது.
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் நிறைவு
இலங்கையின் 9வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக இலங்கையர் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதாள உலக குற்றவாளி எஸ்.எப். லொக்கா சுட்டுக்கொலை
அநுராதபுரம், தஹய்யாகம சந்தியில் இன்று (05) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எப். லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பொலிஸாரால் கைது
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'கெசல்வத்தை ரெய்னாவின் உதவியாளரை பேலியகொட பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அமைதியான தேர்தலுக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பொலிஸ்
நியாயமானதும் அமைதியானதுமான தேர்ததலினை உறுதிபடுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 69 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
திடீர் சுகவீனமுற்ற மீனவரை சிகிச்சைக்காக கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகை
மிகக்கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர்.