--> -->

தியத்தலாவை மற்றும் பூனானை ஆகிய இரு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து மற்றுமொரு குழுவினரான 132 பேர் இன்று வீடு திரும்பினர்.

மார்ச் 30, 2020

தியத்தலாவை மற்றும் பூனானை ஆகிய இரு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மற்றுமொரு குழுவினரான  132 பேர் இன்று வீடு திரும்பினர்.

இவர்களில் தியத்தலாவையில் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும், புனானையில்  தனிமைப்படுத்தப்பட்ட 56 பேரும் உள்ளடங்குவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தனிமைபடுத்தலுக்கு உட்பட்ட அனைவருக்கும் தனிமைபடுத்தலுக்கான சான்றிதழ்கலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.