--> -->

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத முறையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – அரசாங்கம்

மார்ச் 30, 2020

பிராந்திய மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லாத முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பது குறித்தும், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க தெரிவு செய்யும் பகுதிகள் மற்றும் முடக்கப்படும் பகுதிகள் தொடர்பாக அறிவிக்கப்படமுன்னர் அப்பகுதி தொடர்பாக பெறப்பட்ட தகவல்களை முறையாக ஆராயந்த பின்னரே இவ்வாறு அறிவிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.