--> -->

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

ஜனவரி 16, 2019

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான ஜேஎஸ் "இகாசுசி" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு செவ்வாய் கிழமையன்று (ஜனவரி, 15) இலங்கையை வந்தடைந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கடற்படை கப்பலான ஜேஎஸ் "இகாசுசி"வை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சி நிகழ்வுகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.