--> -->

தேவையுடைய மக்களுக்கு யாழில் உள்ள படைவீரர்களினால் உலர் உணவு பொதிகள் விநியோகம்

ஏப்ரல் 17, 2020

யாழ் குடாநாட்டில் உள்ள படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான மனிதாபிமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் அண்மையில் விநியோகிக்கப்பட்டன.

குறித்த உலர் உணவுப் பொதிகள் இளவாலை, உரும்பிராய், உடுவிலான் மற்றும் சுன்னாகம் ஆகிய பகுதிகளில் வினியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.