--> -->

புகையிரத நிலையங்கள் இலங்கை கடற்படையினரால் தொற்றுநீக்கம்

ஏப்ரல் 21, 2020

இலங்கை கடற்படையினரால் மாகோ மற்றும் காலி புகையிரத நிலையங்கள் அண்மையில் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளன நிலையில் பொதுமக்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்தும் போது கிருமித் தொற்றுகளுக்கு உள்ளாகாமல் இருப்பதை கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை பேணும் வகையில் இத்திட்டத்தை பரந்த அளவில் முன்னெடுக்க இலங்கை கடற்படை எதிர்பார்த்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.