--> -->

கலால் அதிகாரிகளை தாக்கிய சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

ஏப்ரல் 25, 2020

கடமையில் இருந்த கலால் துறை அதிகாரிகளைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், நேற்றய தினம், வலப்பனை, நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது நீதிபதி, அவர்களை ஏப்ரல் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஹங்குராங்கெத்த, ரிக்கிலகஸ்கட பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் மதுபான விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையின் போது கலால் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். தாக்குதல்தாரிகள் தொடர்பாக நடாத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர்களிடம் இருந்த துப்பாக்கி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.