--> -->

அவுஸ்திரேலியாவிலிருந்து 274 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வருகை

மே 10, 2020

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 274 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 605 விமானத்தின் மூலம் மெல்பேர்ன் நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை 6.12 மணி அளவில் வந்தடைந்ததாக விமான நிலையத்தின் பிரதி முகாமையாளர் சமத் சோமதிலக உறுதிப்படுத்தினார்.

நாடு திரும்பிய இவர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் உள்ள விமானப்படை வீரர்களினால் தொற்று நீக்கல் செயல்முறைக் உட்படுத்தப்பட்டதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புஅமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.