--> -->

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,374

மே 17, 2020
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை (மே, 16) தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த சுமார் 9,374 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 32 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது, சுமார் 2,734 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.