--> -->

தேசியப் போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு177 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டனர்

மே 19, 2020

11வது தேசியப் போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மொத்தம் 177 இராணுவ அதிகாரிகள் அவர்களின் அடுத்த தரத்திற்கு நேற்று (மே,18) தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் தரமுயர்த்தப்பட்ட இராணுவ அதிகாரிகளில் ஐந்து மேஜர் ஜெனரல்கள், இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியைச் சேர்ந்த நான்கு பிரிகேடியர்கள், 39 லெப்டினன்ட் கேர்ணல்கள், 69 மேஜர்கள், 60 லெப்டினன்கள் ஆகியோர்கள் உள்ளடங்குகின்றனர்.