--> -->

மினுவாங்கொடை கிளஸ்டர் 569 ஆக அதிகரிப்பு

ஒக்டோபர் 06, 2020

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் தொற்று சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 466 தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம்  காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil