--> -->

12,095 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு

நவம்பர் 23, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 400 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  20,171 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களில்  வெளிநாடுகளிலிருந்து வருகை  தந்த ஒன்பது  இலங்கை பிரஜைகளும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலிருந்து 121 பேரும்,  கம்பஹா மாவட்டத்திலிருந்து 112 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 27 பேரும் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16,639 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 10,309 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் 12,095 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பொரள்ளை,கொழும்பு 10, கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15  பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87ஆக  பதிவாகியுள்ளது

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 42 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார்4,501பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.