--> -->

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 19, 2022

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 19) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த கடற்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  அத்துடன் கடற்படைத் தளபதியின் புதிய நியமனத்தில் வெற்றிபெற பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்​பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

வைஸ் அட்மிரல் பெரேரா 25வது கடற்படைத் தளபதியாக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 18)  நியமிக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.