--> -->

தற்போது காணப்படும் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களில் மோசமடைய வாய்ப்புள்ளது

டிசம்பர் 23, 2022

தற்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை வார இறுதி நாட்களில் (24 மற்றும் 25 டிசம்பர்) மேலும் அதிகரிப்பு ஏற்படும்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையைக் கடக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக இன்று (23) காலை வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும், பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஏனைய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.