--> -->

ஐ.நா மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழு இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகளை சந்திப்பு

மார்ச் 29, 2023

ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு மற்றும் ஆலோசனை குழு இலங்கைப் பாதுகாப்பு படைகளின் மேம்படுத்தப்பட்ட திறன்களை மதிப்பிடுவதற்கும் மாலியில் எதிர்கால ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இணைவதற்கும் தற்போது இலங்கையில் உள்ள அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை (24) விஜயத்தினை மேற்கொண்டனர்.

இச் சந்திப்பு இலங்கையில் உள்ள அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அசங்க பெரேரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வருகை தந்த ஐ.நா பிரதிநிதிகள் குழுவில் திரு. ஜேம்ஸ் விக்டர் டி ரோகோல், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உள்ள மூலோபாய படை உருவாக்கம் மற்றும் திறன் திட்டமிடல் பிரிவு கேணல் லாரன்ஸ் கபின (துணை தலைமை யூ7 பயிற்சி மற்றும் மினுஸ்மாவின் மதிப்பீடு), நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் படைத் தலைமுறை சேவை லெப்டினன் கேணல் ராஜிவ், ஐக்கிய நாடுகளின் பிராந்திய பகுதி ஒருங்கிணைப்பாளர் (மினுஸ்மா) திரு. மார்க் பிளட் மற்றும் திரு. சத்விந்தர் சிங் போல் (மினுஸ்மாவில் உபகரண தலைமை அதிகாரி) ஆகியோர் இருந்தனர்.

இலங்கை மேலதீக போர் போக்குவரத்து செயற்பாட்டுத் தயார்நிலை, போர் பொறியியல் மற்றும் மருத்துவத் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்ட விசேட விளக்கக்காட்சி மற்றும் பொருத்தமான ஆர்ப்பாட்டங்களுடன் இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலைய எண் 3 ன் பயிற்சி தொகுதி வெற்றிகரமாக முடித்த அதிகாரிகளின் பங்கேற்புடன் அரங்கேற்றப்பட்டன.

முன்னாள் தளபதி கேணல் தினேஷ் புலத்சிங்கள மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளின் வழிகாட்டலுடன் விளக்ககாட்சிகள் திரையிடப்பட்டன.

இலங்கை சமாதன ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி நிலைய குழுவின் முன்-பணியிடல் பயிற்சியின் தரம் மற்றும் தரத்தை உறுதி செய்யும் எதிர்பார்ப்புடன் ஐ.நா குழு குகுலேகங்காவில் பயிற்சி பெற்ற விரைவில் ஐக்கிய நாடுகள் பணிக்காண மேலதீக போர் போக்குவரத்து பீ-1 குழுவின் செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பிடுகிறது. முன்னதாக, அவர்கள் எம்பிலிபிட்டிய இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலை மற்றும் உடவலவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் தள பணிமனை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழுவின் நோக்கம், மேலதீக போர் போக்குவரத்து குழுவின் தயார்நிலை மற்றும் குழுவின் பயிற்சிக்கான தரநிலைகளை ஆய்வு செய்வது மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் துறையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியின் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிபந்தனைகளை சரிபார்ப்பது.

நன்றி - www.army.lk