--> -->

சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

ஜூன் 29, 2023

தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க  அமைச்சர் கௌரவ.பிரமீத பண்டார தென்னக்கூன் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 26ம் திகதி அமைச்சராகத்திற்கு  உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இலங்கை விமானப்படை தளபதி தான் பதவி வகித்த காலத்தில் இலங்கை விமானப்படைக்கு  வழங்கிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.  மேலும் இந்த சந்திப்பை  நினைவு கூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் அமைச்சர் தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்

நன்றி - www.airforce.lk