--> -->

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஆகஸ்ட் 14, 2023

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில நியமிக்கப்பட்டுள்ளார்.

எயார் வைஸ் மார்ஷல் பியன்வில இன்று (ஆகஸ்ட் 14) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமா இதுவரை காலம் செயற்பட்ட மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்களின் வெற்றிடத்திற்கே எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியன்வில நியமிக்கப்பட்டுள்ளார்.