--> -->

இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2023 கொழும்பில் தொடங்கியது

ஆகஸ்ட் 15, 2023

அமெரிக்க இந்து-பசிபிக் கடல்சார் கட்டளை (US Indo – Pacific Command - INDOPACOM), இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு – 2023 (Indo-Pacific Environmental Security Forum-IPESF) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (2023 ஆகஸ்ட் 14) தொடங்கியதுடன் இதன் தொடக்க விழா இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவன் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இன்று (2023 ஆகஸ்ட் 14) தொடங்கிய 12வது இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு 2023 ஆகஸ்ட் 17 வரை நான்கு (04) நாட்களாக நடைபெறும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருப்பொருள்களின் கீழ் நடைபெறுகின்ற இந்த ஆண்டு மாநாடுக்காக இந்து-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட இராணுவ வீரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்து-பசிபிக் பங்குதாரர்களால் பிராந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வகிக்கும் பங்களிப்பு பற்றி கற்றல் மற்றும் நல்ல நடைமுறைகள் பற்றிய விளக்கக்காட்சிகள், அமர்வுகள், வழக்கு ஆய்வுகள் மற்றும் குழு நடவடிக்கைகள் மூலம் அறிவும் அனுபவமும் பகிரப்படுகின்றன.

அதன்படி, இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று (2023 ஆகஸ்ட் 14) பருவநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு (Climate Change and Security) என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பங்குதாரர்களிடையே கற்றுக்கொண்ட பாடங்கள், சிறந்த நடைமுறைகள் விளக்கக்காட்சிகள், அமர்வுகள், வழக்கு ஆய்வுகள் மற்றும் குழு நடவடிக்கைகள் மற்றும் அனுபவம் பரிமாறப்பட்டது. மேலும், 2023 ஆகஸ்ட் 15 ஆம் திகதி கடல், பெருங்கடல் மற்றும் நீர் பாதுகாப்பின் கீழ் (Maritime, Ocean and Water Security), 2023 ஆகஸ்ட் 16 நகரமயமாக்கல் மற்றும் நிலப் பாதுகாப்பின் தாக்கங்கள் ( Impacts of Urbanization and Land Security) மற்றும் இந்த மாநாட்டின் கடைசி நாளான 2023 ஆகஸ்ட் 17 ஆம் திகதி தேசிய மற்றும் பிராந்திய பின்னடைவைக் கட்டியெழுப்பு (Building National and Regional Resilience) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற உள்ளது.

மேலும், இந்து-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2023 இல் 28 இந்து-பசிபிக் மாநிலத்தின் 28 நாடுகள் மற்றும் பிற அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 140 இராணுவத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர், மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம், அமெரிக்காவின் இந்து-பசிபிக் கட்டளையுடன் இணைந்து இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது.

நன்றி - www.navy.lk