--> -->

எஹெலியகொடை பிரதேசத்திற்கு சிவப்பு மண்சரிவு
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

செப்டம்பர் 05, 2023
  • தொடர்மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி, எஹெலியகொடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு 3 ஆம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட சமீபத்திய மண்சரிவு முன்னெச்சரிக்கையின்படி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை (செம்மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, காலி மற்றும் கண்டி மாவட்டத்தின் பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் 5ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, மேல், சப்பிரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைப்பகுதிகள், மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் மத்திய பகுதிக்கு உச்சியில் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் 12.09 மணியளவில் பம்பலப்பிட்டி, மாலிபொட, கெப்பிட்டிபொல, படல்கும்புர மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சியிலிருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.