--> -->

75ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வளிமண்டலவியல் திணைக்களம்

ஒக்டோபர் 04, 2023

வளிமண்டலவியல் திணைக்களத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திணைக்கள வளாகத்தில் இன்று (04)  நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை வரவேற்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் சேவைகளின் மூலம் பெறப்படும் வருமானம், திணைக்களதில் தற்போது பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் மனிதவள அபிவிருத்திக்கும் முதலீடு செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என தெரிவித்தார்.

கடந்த 75 ஆண்டு காலத்தில், பேரிடர்களை எதிர்கொள்வதற்கு அவசியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு இத்திணைக்களம் அளப்பரிய  சேவையை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக, பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க, ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் கௌரவ அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.