--> -->

இராணுவப் படையினரால் தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

ஒக்டோபர் 05, 2023

தம்பலகமுவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான மருந்து களஞ்சியசாலை மற்றும் ஆய்வுகூட கட்டிடத்தில் ஏற்பட்ட அவசர தீ, இலங்கை இராணுவப் படையினரின் தலையீட்டில் அணைக்கப்பட்டுள்ளது.

22 ஆவது காலாட்படை பிரிவின் கீழ் உள்ள 65 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிரதேச பொதுமக்களின் உதவியுடன் இந்த தீ அணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.