--> -->

தியவன்னா வெசாக் வலயம் 2024' இரண்டாவது நாளாக தொடர்கிறது

மே 24, 2024

'புத்த ரஷ்மி' வெசாக் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தியவன்னா வெசாக் வலயம் 2024, இன்று மாலை (மே 24) இரண்டாவது நாளாக பத்தரமுல்லையில் ஆரம்பமானது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விகும் லியனகே ஆகியோர் இரண்டாம் நாள் வெசாக் நிகழ்வில் கலந்து கொண்டு டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வெசாக் விளக்குகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கலாச்சார குழுக்களின் பக்தி கீ (மத பக்தி பாடல்கள்) தியவன்னா வெசாக் வலயத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது.

வெசாக் வலயத்தில் வெசாக் விளக்கு கண்காட்சி, வெசாக் தன்சல் கடைகள், மூலிகை தேநீர் கடைகள், ஒளி அலங்காரங்கள், அலங்கரிக்கப்பட்ட நடமாடும் பக்தி கீ மேடை மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி வெசாக் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய வெசாக் அலங்காரங்களை பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளர் திருமதி. தம்மிக்க கே. விஜயசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கண்டுகளித்தனர்.