--> -->

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களுக்கு
சேவா வனிதா பிரிவினால் நிதி உதவி

ஜூன் 12, 2024

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) நிதியுதவி வழங்கியது.

அமைச்சில் இன்று (ஜூன் 12) நடைபெற்ற நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அமைச்சு ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சித்ராணி குணரத்னவின் எண்ணக்கருவின் அடிப்படையில், அமைச்சு ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் இந்நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.