--> -->

புதிய மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஜூலை 02, 2024

இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் இன்று (ஜூலை 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இன்று பிற்பகல் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த மாலைதீவு தூதுவரை ஜெனரல் குணரத்ன அன்புடன் வரவேற்றார்.

இச்சந்திப்பின் போது நிகழ்ந்த சுமுகமான கலந்துரையாடலின் போது ஜெனரல் குணரத்ன மாலத்தீவு தூதுவரின் புதிய நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர, இலங்கைக்கான மாலைதீவின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.