--> -->

இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 09, 2024

இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சரண்ஜீத் சிங் தேவ்கன் தலைமையிலான இந்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை 09) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் இந்திய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோரிக்கிடையில் இராணுவ பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கடல்சார் கள விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர, கேர்ணல் நிதின் யாதவா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேர்ணல் மந்தீப் சிங் நேகி ஆகியோரும் கலந்துகொண்டனர்.