--> -->

சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானி
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 16, 2024

சீஷெல்ஸ் நாட்டின் மக்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பிரிகேடியர் மைக்கல் ரொசெட் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை 16) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரிகேடியர் ரொசெட் அவர்களை ஜெனரல் குணரத்ன வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நதீக குலசேகரவும் கலந்து கொண்டார்.

மேலும், பிரிகேடியர் ரொசெட் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலங்கை வந்துள்ளார்.