--> -->

‘ராஜாலி சந்தேசய’; ஜெனரல் கமல் குணரத்னவின் 10வது இலக்கிய படைப்பு வெளியிடப்பட்டது

செப்டம்பர் 07, 2024
  • மிக நீளமான சிங்கள கவிதை தொகுப்பு: சுதந்திரம் முதல் பயங்கரவாதத்தின் முடிவு வரையிலான அனுபவத்தின் கவிதைப் பிரதிபலிப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 2579 கவிதைகளைக் கொண்ட இலங்கையின் இலக்கிய வரலாற்றில் மிக நீளமான கவிதை தொகுப்பான ‘ராஜாலி சந்தேஷய’ நேற்று மாலை (செப்டம்பர் 06) நெலும் பொகுண திரையரங்கில் வெளியிடப்பட்டது. அவரது பிறந்த தினமான நேற்று இவ்வெளியீட்டு விழா நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காவியத் தொகுப்பு, புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பிரதிபலிப்பாகவும், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் போரின் போது இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய ஜெனரல் குணரத்னவின் தனிப்பட்ட அனுபவங்களை கொண்டு வடிக்கப்பட்டுள்ளது.

இந்த படைப்பு இலங்கை இலக்கியம் மற்றும் அதன் நவீன வரலாற்றில் வலிமிகுந்த மற்றும் வெற்றிகரமான அத்தியாயம் ஆகிய இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. பல சிறந்த இலக்கிய ஆக்கங்களால் இலங்கை இலக்கியத்தை வளப்படுத்திய முன்னோடி எழுத்தாளர்களில் ஜெனரல் குணரத்னவும் ஒருவர்.

ஜெனரல் குணரத்ன மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோர் இலக்கியப் படைப்பின் முதல் பிரதிகளை வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காலம் சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் துணைவியார்களான திருமதி லலி கொப்பேகடுவ, மற்றும் திருமதி மானெல் விமலரத்ன ஆகியோருக்கும், 'அபிமன்சல'வைச் சேர்ந்த அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர பிரதான உரை நிகழ்த்தியதுடன் வண. இந்துரகரே தம்மரதன தேரர், புதிதாக வெளியிடப்பட்ட படைப்பின் இலக்கிய முக்கியத்துவம் தொடர்பில் கருத்துரையாற்றினார்.

இந்த இலக்கியப் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், புத்தகத்தின் ஒரு பிரதி கொழும்பு ஆனந்தா கல்லூரியின் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.அதனை பாடசாலையின் சார்பாக அதிபர் லால் திஸாநாயக்க பெற்றுக்கொண்டார்.

ராஜாளி சந்தேஷய' இலங்கையின் பண்டைய காவ்ய சந்தேச மரபிலிருந்து உத்வேகம் பெறுகிறது, அங்கு செய்திகள் கவிதைகள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. இந்த படைப்பில், ஜெனரல் குணரத்ன இந்த பாரம்பரிய வடிவத்தை உபயோகப்படுத்தியுள்ளார்.

‘ராஜாலி சந்தேஷய’ கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, போரில் பொதுமக்கள் அனுபவித்த துன்பங்களை நினைவூட்டுவதாக உள்ளது. ஜெனரல் குணரத்னவின் அனுபவங்கள் கவிதைக்கு நம்பகத்தன்மையையும் உணர்ச்சிகரமான ஆழத்தையும் கொண்டு வருகின்றன, இது போரின் தீவிரத்தன்மையையும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட மகத்தான தியாகங்களையும் வாசகர்கள் புரிந்து கொள்ள உதவுகிறது.

அவர் தனது சொந்த அனுபவங்களிலிருந்து போரின் கொடூரம் மற்றும் தாய்நாட்டைக் காத்த ஆண்கள் மற்றும் பெண்களின் வீரத்தை விவரித்து கவிதையாக வடித்துள்ளார்.

கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய பொதுமக்கள் படும் துன்பங்களை நினைவூட்டுவதாகவும் ‘ராஜாலி சந்தேசய’ அமைந்துள்ளது. ஜெனரல் குணரத்னவின் அனுபவங்கள் கவிதைகளுக்கு நம்பகத்தன்மையையும் உணர்வுபூர்வமான ஆழத்தையும் கொடுக்கின்றன, இது போரின் ஈர்ப்பு மற்றும் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க மகத்தான தியாகங்களை வாசகர்கள் புரிந்து கொள்ள அனுமதிக்கிறது.

வணக்கத்திக்குரிய மகா சங்கத்தினர், விசேட அதிதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.