--> -->

ஊடக அறிக்கை

ஒக்டோபர் 04, 2024
  • தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக மீளப்பெறுதல்

தற்பாதுகாப்பிற்காக பொது மக்களுக்கு (சிவிலியன்களுக்கு) வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6(1) மற்றும் 6(2) இன் கீழ் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி துப்பாக்கிகளை தற்காலிக அடிப்படையில் அரசாங்கம் கையகப்படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மேலும், இவற்றை உரிய முறையில் மீள்பரிசீலனை செய்த பிறகு அவை மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, அனுமதி பத்திரம் பெறப்பட்டு துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தன்வசம் வைத்துள்ள அனைத்து உரிமையாளர்களும் 2024.11.07 திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவில் (CEFAP) ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு ஒப்பபடைத்ததன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு அலுவலகத்திற்கு (CEFAP) வணிக வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் கொள்முதல் பிரிவினால் வழங்கிய ஏற்புச் சீட்டின் பிரதி ஒப்படைக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள திகதிக்கு முன்னர் தமது துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும்.

இதேவேளை, சொத்து/பயிர்ச்செய்கை மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.