--> -->

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 09, 2024

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகோந்தாவை (ஓய்வு) இன்று (அக் 09) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.

அவுஸ்திரேலிய தூதுவருடன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கேர்னல் அமண்டா ஜோன்ஸ்டன் உடனிருந்தார். எயார் வைஸ் மார்ஷல் தூயகொந்த (ஓய்வு) ஆஸ்திரேலிய தூதுக்குழுவை அன்புடன் வரவேற்று கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் பரஸ்பர மதிப்புகள் குறித்து எடுத்துக்காட்டாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் முடிவில், நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுப் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தாவும் கலந்து கொண்டார்.