--> -->

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC)
தூதுக்குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 21, 2024

கேர்ணல் லாரா தெரேஸ் ட்ராய் தலைமையிலான ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி (DSSC) தூதுக்குழு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (அக் 21) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தது.

வரவேற்பை தொடர்ந்து, பாதுகாப்புச் செயலர் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்தா மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கான பாதுகாப்பு ஆலோசகர் (DA) கர்னல் அமண்டா ஜோன்ஸ்டன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ இணைப்பு அதிகாரி (இலங்கை இராணுவம்) கேர்ணல் பிரியங்க ஜயசூரியவுடன் ஒரு தகவல் அமர்வில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.