"Defender of the Fatherland's Day" விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்
பெப்ரவரி 20, 2025கொழும்பு Galle Face Hotel லில் புதன்கிழமை (பெப்ரவரி 19) நடைபெற்ற "Defender of the Fatherland's Day" விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), 1957 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் வளர்ந்துவரும் உறவை வலியுறுத்தினார்.
நேற்று மாலை நடந்த நிகழ்விற்கு வருகைதந்த பிரதி அமைச்சரை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan வரவேற்றார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
தனதுரையில் போது பிரதி அமைச்சர், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷ்யா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
கல்விக்கான ரஷ்ய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, குறிப்பாக ரஷ்ய பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசுகள் தொடர்பில் எடுத்துரைத்தார்.
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மை, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இரு நாடுகளும் தத்தமது பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்காக பாடுபடுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முன்னாள் பிமுப்படை தளபதிகள் மற்றும் இராஜதந்திரீகல் பலரும் கலந்துக் கொண்டனர்.