இலங்கை விமானப்படை மருத்துவமனை திட்டம் தொடர்பான கூட்டம் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
மார்ச் 07, 2025இலங்கை விமானப்படை மருத்துவமனை கட்டுமான திட்டம் குறித்த கூட்டம் இன்று (மார்ச் 7) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இம்மருத்துவமனையின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தபட்டது. உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதி பரிசீலனைகள் மற்றும் திட்டத்தை சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அரசு அமைப்புகள் இடையிலான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
விமானப்படைக்குள் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் மருத்துவமனையின் முக்கியத்துவத்தை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார், மேலும் அதை வெற்றிகரமாக முடிக்க அனைத்து பங்குதாரர்களும் திறம்பட ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.