பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் பங்களாதேஷில் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை கொண்டாடியது

மார்ச் 27, 2025

இலங்கையில் உள்ள பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் புதன்கிழமை (மார்ச் 26) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் பங்களாதேஷின் 54வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் தொழில் அமைச்சர் கௌரவ அனில் ஜயந்த பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். பாதுகாப்பு பிரதி  அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரும் இந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தனர்.

இலங்கைக்கான  பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஆண்டலிப் எலியாஸ், நிகழ்விற்கு வருகைதந்த அதிதிகளை   வரவேற்றார்.  பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம். மொனிருஸ்ஸமானும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டனர்.

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தனது உரையின் போது, பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை  அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் இராஜதந்திர உறவுகளையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், முப்படை தளபதிகள், பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் பங்கேற்றனர்.