--> -->

இராணுவத்தினரால் கைகாவளை ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

பெப்ரவரி 17, 2021

மீமுரே பிரதேசத்தில் உள்ள கைகாவளை ஆரம்பப் பாடசாலையின் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணியை அண்மையில் ஆரம்பித்தனர்.

கடந்த 13ம் திகதி மீமுரேயில் இடம்பெற்ற ஜனாதிபதியின் 'கம சமக பிளிசந்தர' நிகழ்ச்சித்திட்டத்தின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, ஜனாதிபதி, இந்த புனரமைப்புப் பணிப்பொறுப்பை இராணுவத்தினரிடம் கையளித்தார்.

இதற்கமைய, இராணுவத்தின் பொறியியலாளர் படையணியின் , 6வது சிவில் பொறியியலாளர் படைப்பிரிவைச் சேர்ந்த படை வீரர்களின் மனித வலு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.